Chitirrai Thiruvizha - Day 7


ஏழ்பிறப்பும் இணையும் ஒரே சொந்தம்: "ஏழேழு பிறவியிலும் நாம் இணைந்திருப் போம்' என்று அன்புமிக்க கணவனும் மனைவியும் பேசிக் கொள்வார்கள். ஆனால், இது நடக்கப் போகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. நம் மதுரைத் தாய் மீனாட்சியைப் பெற்ற அன்னை காஞ்சனமாலைக்கே இந்த கொடுப் பினை இல்லையே! அவள் முற்பிறப்பில் கந்தர்வக்கன்னியாக இருந்தாள். மறுபிறப்பில் மானிட ஜென்மம் எடுத்து மலையத்துவஜனின் மனைவியானாள். ஆனால், ஏழுபிறப்பிலும் ஒரே ஒரு சொந்தம் மட்டுமே தொடரும். அது தான் அன்னை மீனாட்சிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. இது பிரிக்க முடியாத பந்தமாக இருக்கிறது.
இந்த பந்தம் நிரந்தரமாக வேண்டுமென்றால் பிறவிகளை அறுத்தெறிந்து விட்டால், நாம் மீனாட்சியுடனும், சுந்தரேஸ்வரருடனும் இரண்டறக் கலந்து விடலாம். நமக்கு ஏழு பிறப்புகள் மட்டுமல்ல, ஏழு வகை பிறவிகளும் ஏற்படுகின்றன. அவரவர் செய்த தீவினை, நல்வினைக்கேற்ப தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோம். இந்த ஏழுவகை பிறவியுமே தொல்லை தருவது தான். தாவரமாய் பிறந்தால் தண்ணீரின்றி தவிக்க வேண்டி வரும் அல்லது வெள்ளத்தில் மூழ்க வேண்டியிருக்கும்! பூச்சியாகப் பிறந்தால் பிறர் காலில் மிதிபட்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்! தேவராகப் பிறந்தால் அசுரர்களால் அல்லல்பட வேண்டியிருக்கும்! எனவே இறைவனிடம், ""ஆண்டவா! ஏழாம் திருநாளான இன்று ஏழுவகை பிறவியுமே எனக்கு வேண்டாம். பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை கொடு. அதுவரை எங்களைச் செல்வச்செழிப்புடன் வாழ வை,'' என்று பிரார்த்திக்க வேண்டும். இன்று அன்னை மீனாட்சி யாளி வாகனத்திலும், சுந்தரேஸ் வரர் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...