Chitirrai Thiruvizha - Yethir Sevai


எதிர்சேவை என்றால் என்ன: கள்ளழகர் இன்று நம்மைக் காண வருகிறார், நமக்கு அருளை வாரி வழங்க வைகை நோக்கி வருகிறார். அவரை நாம் வரவேற்க இருக்கிறோம். சர்க்கரை நிரப்பிய செம்பில் தீபமேற்றி, "எங்களுக்கு இனிய வாழ்வைக் கொடு' என கேட்கப்போகிறோம்.

"சேவை' என்றால், "இதோ! வருகிறாரே பகவான், அவருக்கு தூபம் காட்டுவதும், தீபம் காட்டுவதும் மட்டுமே சேவை என்று நினைக்கிறோம். நிஜத்தில், நாம் அவருக்கு சேவை செய்யப்போவதில்லை. நமக்கு சேவை செய்வதற்காக அவர் மதுரைக்கு வந்திருக்கிறார். அவர் சாதாரண சேவைகளையா செய்திருக்கிறார்! கஜேந்திரன் என்னும் யானை முதலையிடம் சிக்கிக் கொண்டது.

"ஆதிமூலமே' என ஓலமிட்டது. பகவான் கருடன் மீது பறந்து வந்தார் அந்த யானைக்கு சேவை செய்ய! ""என் தந்தை உன்னை மறுக்கிறார். நீ இருப்பது நிஜமானால், உடனே எழுந்தருள் இந்த தூணில்'' என்று கேட்டான் பிரகலாதன். தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மராக அவர் வெளிப்பட்டார் அந்த சிறுவனுக்கு சேவை செய்ய. ""ஐயோ! என்னை மானபங்கம் செய்கிறார்களே! கிருஷ்ணா ஓடி வா'' என அபயக்குரல் கொடுத்தாள் திரவுபதி. பகவான் ஓடோடி வந்தா992;் அந்த அபலைக்கு பணியாற்ற! இப்போதும் கூட எதற்கு வருகிறார்? தவளையாக மாறி விட்ட மண்டூக முனிவருக்கு மீண்டும் சுய உருவை வழங்க! இப்படிப்பட்ட கருணை மிக்க அவரது சேவைகளின் அளவை மதிப்பிட முடியுமா! அவரது சேவையின் முன் நமது சேவை எம்மாத்திரம்? சரி...அவர் எப்படி வருகிறார்?

கள்ளராக வேடமிட்டு வருகிறார்! நம் உள்ளங்களைக் கொள்ளையடிக்க இப்படி ஒரு உன்னத வடிவம்! பக்தர்களிடம் ஒளிந்திருக்கும் பக்தி என்னும் வெண்ணெயைத் திருடித்தின்பதில் தானே அவருக்கு அலாதிப் பிரியம். அந்த நாயகர் இன்று காலை மூன்றுமாவடியிலும், தொடர்ந்து வைகை வடக்கிலுள்ள முக்கிய பகுதிகளிலும் சேவை சாதித்து விட்டு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலை வந்தடைவார். நாளை புனித நதியாம் வைகையில் எழுந்து அருள்வார்.

வைகை நதி இன்று பாழ்பட்டு கிடக்கிறது. இந்நதி, புராண காலத்தில் நாம் கேள்விப்பட்டது போல மீண்டும் மாற வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருகி ஓட வேண்டும். நதி சுத்தமாக வேண்டும். அவர் மனம் வைத்தால் இந்த சேவையை கணப்பொழுதில் நமக்கு செய்து தந்து விடுவார். அனைவர் நலம் கருதி,அழகரிடம் நம் ஒட்டு மொத்த பிரார்த்தனை இதுவாகவே இருக்கட்டும்
Related Posts Plugin for WordPress, Blogger...