
ஐந்தாம் திருநாள் கொண்டாட்டம்: இன்று சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள். மதுரையின் தாய் மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.
இன்றைய தினம் அவர்களிடம் நமது வேண்டுகோள் என்னவாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள் வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் மனிதனை ஆட்டுவிக்கின் றன. அதாவது, உடல் இன்பத்தை தேடி அலைகிறது. வாய் என்னென் னவோ பேசுகிறது, எதை எதையோ சாப்பிடுகிறது. கண்கள் பார்க்கக் கூடாத அனைத்தையும் பார்க்கிறது. மூக்கு தேவையற்ற வாசனைகளை நுகரத்துடிக்கிறது. செவி கண்ட கண்ட இசையையும், தேவையற்ற பேச்சுகளையும் கேட்கிறது. இந்த புலன்களெல்லாம் தவறான பாதையில் செல்வதால், மனம் அலைபாய்கிறது. எனவே, நமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என மீனாட்சி தாயிடம் கேட்க வேண்டும்.
""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே'' என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.
இதை சூசகமாகக் காட்டத்தான் மற்ற நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் வரும் சுவாமியும், அம்பாளும் இன்று குதிரை வாகனத்தில் வருகின்றனர். (ஒரே வாகன சிறப்பு ரிஷபத்துக்கும் உண்டு) குதிரையை அடக்க கடிவாளம் இருப் பது போல, உங்கள் மனங்களையும் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்கள் என்று அவர்கள் இந்த வாகனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு இறைவனால் தரப்பட்ட உறுப்புகள் நல்லதை மட்டுமே செய்ய சுவாமியிடமும், அம்பாளிடமும் வரம் வேண்டுவோம்.
இன்றைய தினம் அவர்களிடம் நமது வேண்டுகோள் என்னவாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள் வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் மனிதனை ஆட்டுவிக்கின் றன. அதாவது, உடல் இன்பத்தை தேடி அலைகிறது. வாய் என்னென் னவோ பேசுகிறது, எதை எதையோ சாப்பிடுகிறது. கண்கள் பார்க்கக் கூடாத அனைத்தையும் பார்க்கிறது. மூக்கு தேவையற்ற வாசனைகளை நுகரத்துடிக்கிறது. செவி கண்ட கண்ட இசையையும், தேவையற்ற பேச்சுகளையும் கேட்கிறது. இந்த புலன்களெல்லாம் தவறான பாதையில் செல்வதால், மனம் அலைபாய்கிறது. எனவே, நமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என மீனாட்சி தாயிடம் கேட்க வேண்டும்.
""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே'' என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.
இதை சூசகமாகக் காட்டத்தான் மற்ற நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் வரும் சுவாமியும், அம்பாளும் இன்று குதிரை வாகனத்தில் வருகின்றனர். (ஒரே வாகன சிறப்பு ரிஷபத்துக்கும் உண்டு) குதிரையை அடக்க கடிவாளம் இருப் பது போல, உங்கள் மனங்களையும் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்கள் என்று அவர்கள் இந்த வாகனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு இறைவனால் தரப்பட்ட உறுப்புகள் நல்லதை மட்டுமே செய்ய சுவாமியிடமும், அம்பாளிடமும் வரம் வேண்டுவோம்.
Today is the 5th day of "CHITTIRAI THIRUVIZHA". Madurai's God was 'Sundareshwarar' and Goddess 'Meenakshi'. They both come in their vehicle which was "The Horse". Today we will come to know about what we should pray to them. Human beings are controlled by the five sense of Organs such as body, mouth, eye, nose, and ears. Our body was searching for lust, mouth was talking and eating unnecessary things, eyes were seeing bad things, nose were smelling unwantedthings, ears were hearing bad things.. Though these organs are travelling in the wrong path. Our soul was not in a steady way. Therefore, we should pray to Goddess Meenakshi that she should help us to control all these things and they should come into our control. "Our heart and body is the great temple; our mouth is the way; Shivalingam was the soul of Good people". These were the words of 'Thirumoolar' in his 'Thirumandiram'. When we are living by controlling our soul, our bad things were going out of us and we were like Great Shrine.At that time his soul was acting as Shivalingam. These were the meanings of the words of Thirumoolar. To resemble this, only on this festival day, God and Goddess come in their horse vehicle, on the other day, they come in diffrent vehicles. On coming in their horse vehicles, they are saying that horses are having control in the Blind Fold. Like that, we should also control our soul and lead a peaceful life. "Our body's part are God's Gift and we should use them in the right way". These were the blessings we should ask God and Goddess.
(Thanks to Yamuna for translating this passage )
Source : http://www.dinamalar.com/